இருளில் வழிதவறி
எங்கோ
அலைந்து
கொண்டிருக்கலாம்
வரும் பாதைகளில்
யாரோ விரித்த
இமைக் கண்ணிகளில்
சிக்கியிருக்கலாம்
மதுவாய்க்
கண்ணாடிச்
சிறைகளில்
அடைக்கப்
பட்டிருக்கலாம்
விழிகள் என்று
நம்பிப்
பூக்களில்
விழுந்திருக்கலாம்
நட்சத்திரங்களுக்குத்
தூக்கம்
போதிக்கத்
தொலைதூரம்
பறந்திருக்கலாம்
தூக்க
மாத்திரைகளாய் மாறிக்
கடைகளில்
விற்பனையாகிக்
கொண்டிருக்கலாம்
விடியும் வரை
விழிக்
கூடுகளுக்குத் திரும்பி வராத
என் உறக்கம்
ஆசியான் எழுத்து விருது பெற்ற கவிஞர்
க.து.மு.இக்பால்
No comments:
Post a Comment