”எங்கேயும்
மனிதர்கள் “
எழுத்து - கமலாதேவி அரவிந்தன்
எழுத்து - கமலாதேவி அரவிந்தன்
தமிழ், மலையாள
எழுத்தாளர்
விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்தப் புத்தகம்.
வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூடத் தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன்போல் பார்த்துப் பார்த்துத் தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன.
ஆனால், இந்த பூம்பட்டு புத்தகம் மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான்.
எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது? கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ?
கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும் சுமிக்கு, தோள் பையில் அந்தர் தியானமாகிப்போன புத்தகம்
கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம்தான்.
அந்தக் கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்குச் சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.!
என்னமோ சந்திர மண்டலத்துக்குப் போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும்.
இந்தா இருக்கும் கேரளா. கண்மூடிக் கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள்.
மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே?
அரைக்கண் உறக்கத்தில், ஏதோ ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை ஞாபகப்படுத்துகிறாள் விமானப் பணிப்பெண்.
அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட !
அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டுவிட்டாள்.
குளித்து, ஜெபித்து, நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.
கேரளத்தில் கால் வைத்த நிமிடத்திலிருந்தே மழைதான். இரவெல்லாம் அப்படிப் பொழிந்து தள்ளியது.விடியலிலாவது சற்றுமட்டுப்படும் என்று எண்ணிய கனவு பலிக்கவில்லை.
கோழிக்கோடு விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியே வந்தபோது , கூந்தலிலிருந்து ஈரம் இன்னும் சொட்டிக்கொண்டிருந்தது.
பல்கலைக்கழக வளாகம் அருகில்தான். ஆனால், அதற்குமுன்னர் காலை உணவுக்குச் செல்லவேண்டும். எங்கே, எப்படி, எந்தப் பக்கம் போக என்று ஒருவினாடி திகைத்து நிற்க,
” நமஸ்காரம் சேச்சி, சுமி ஃப்ரொம் சிங்கப்பூர் தானே?” என்று கணீர்க்குரலில் எதிரில் வந்து நின்ற இளைஞன், லண்டலிருந்து வந்த நாடகாசிரியன் பிரகாஷ் கோரன்.
முதல் நாள் இரவு விருந்தில் பரஸ்பரம் அறிமுகம் செய்விக்கப்பட்டபோது பார்த்த ஞாபகம் இருந்தது.
தலித்திய சமூகத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்து, முன்னேறி, இன்று லண்டனில் நாடகவியல் ஆசிரியராகவும், சுய கலைக்குழுப் பிரமாணியாகவும் வாழும் கோரன் கேரளத்தை மிகவும் நேசிப்பவன். தாய்நாட்டின் ஏக்கம் காரணமாகவே எல்லா இலக்கிய நிகழ்விலும் தவறாது கலந்துகொள்பவன்.
’ மண்பாசத்துக்கு நான் அடிமை சேச்சி”, என்றவன்,
” காலை உணவுக்குப்போக வேண்டிய வழி இந்த பக்கம்!” என்று
சுமியோடு சரளமாகப் பேசிக்கொண்டே காலை உணவைச் சுவைத்தான். மணிப்பிட்டும் கடலைக்கறியும், பப்படமும் கூட்டி அவன் ரசித்து உண்டான்.
சுமிக்குப் பிட்டுக்கு வாழைப்பழமும் சர்க்கரையும்தான் பாந்தம். அங்கு கதலிப்பழம் இருந்தது. சர்க்கரை தீர்ந்து போயிருந்தது. உடனே உப்பி அழகாய் அடுக்கப்பட்ட பால் அப்பம், கண்ணில் பட நாளிரம் சட்டினியும், பொடி மணலாய் உருக்கிய நெய்யும், அருகிலிருந்த தேன் சிறிதும் ஊற்றி, மனம் கனிந்து சாப்பிடத்தொடங்கியபோது சிங்கப்பூர் ஞாபகம் வந்தது. கணவர் இந்நேரம் காலையாகாரம் சாப்பிடிருப்பாரோ, என்ற கவலை ஆக்கிரமிக்க, இந்தக் கவலையே கணவருக்குப் பிடிக்காது என்ற நினைப்பு வர, சுவையான பால் அப்பத்தை கையிலெடுத்தாள். அப்பம் சாப்பிட்டு கடுப்பம் சாய சுடச்சுட குடித்தபோது, பலரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
உற்சாகமாக அரங்க வளாகத்தினுள் நுழைந்தபோது தாலப்பொலியும், செண்டை கொட்டும், குரவையுமாய், படைப்பாளிகளை வரவேற்ற பாங்கு நெஞ்சில் பாகாய் இனித்தது.
அதைவிட மகிழ்ச்சி பார்க்குமிடமெல்லாம், நுனியில் முடிச்சிட்ட ஈரக்கூந்தலும், நெற்றியில் கோபிச்சந்தனக் குறியுமாய், கஷவு முண்டும் நேரியலுமணிந்த பெண்களும், வெள்ளை வேஷ்டியும், முழுநீள ஷர்ட்டும் அணிந்த ஆண்களுமாய், எங்கும் வியாபித்திருந்த மலையாள மணம் காணக்காண கண்களுக்கு தெவிட்டவேயில்லை..
சிங்கப்பூரிலேயே சுமி முண்டு அணியும் பழக்கம் உள்ளவள்தான். பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் அவளுக்கு அப்படி ஒரு பித்து.
அதனாலேயே ” சிங்கப்பூரிலிருந்து வரும் சேச்சியை இப்படி முண்டு செட்டில் எதிர்பார்க்கவில்லை, !” என்று பிரகாஷ் கோரன் வியந்ததை அவள் பொருட்படுத்தவில்லை.
அதற்குள் முல்லைப்புள்ளி நம்பீசன் வந்துவிட்டார் என்றறிந்து அவையே எழுந்து நிற்க, கோபத்துடன் ,இந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை,” என அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு, மேடையில் அவருக்காக இருந்த இருக்கையில் அமராமல், சக படைப்பாளிகளோடு வந்தமர்ந்தவரை வியந்துபோய் பார்த்தாள் சுமி. பொல்லென்று வெளுத்ததலைமுடியும், கம்பீரம் மாறாத தோற்றமுமாய்ச் சிவந்த நிறத்தில் கையெடுத்து வணங்கத் தக்கவராய் நம்பீசன் அமர்ந்திருந்தார்.
சுமி பக்தியில் சிலிர்த்துப்போய் அவரையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.எத்தனை ஆண்டுகளாக இந்த மாமனிதரைச் சந்திக்க இவள் ஏங்கியிருக்கிறாள். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளைச் சந்தித்தபோதெல்லாம் அவர்கள் ஆவலுடன் விசாரிக்கும் மலையாளப் பெயர் முல்லைப்புள்ளி நம்பீசன் பற்றி மட்டுமே.
சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, ஆய்வு என அவர் தடம் பதிக்காத துறையே இல்லை. சினிமாவிலிருந்து வந்த அழைப்புக்கு மட்டும் அவரை அசைக்க முடியவில்லை.
என் களம் சினிமா அல்ல, என்று ஒற்றை வீச்சில் மறுதலித்தவர். இவர் பெயர் தவிர்த்த ஓர் ஆய்விலக்கியம், மொழியியலில் எழுத முடியுமா எனுமளவுக்கு அழுத்தம் திருத்தமாய் பெயர் பதித்தவர்.
இந்த நிகழ்வில் மிகப்பெரிய பெருமிதமே நம்பீசன் சார்தான். அவர்தான் சிறப்புரையாளரும் கூட. அவரது சிறுகதை “யக்ஞம்” வாசித்த அனுபவத்தைச் சுமியால் இன்றும் மறக்க இயலாது. அப்படிப் பரிதவித்து அழுதிருக்கிறாள். பெண்மையின் மாதுர்யம், மோனம், முணுமுணுப்பு, தாபம் என, இதையெல்லாம் கூட, இவ்வளவு சூட்சுமமாய் ஓர் ஆண்மகனால் எழுத முடியுமா என்று விக்கித்துப்போயிருக்கிறாள். அதுவே, அறிவியலில் அவரது கதைஞானம் இதுவரை எந்த வித்தகனுமே முயன்றிராத அசாத்யம். சமூகப்பிரக்ஞை, சமுதாய சிந்தனை எங்கே என்று அலட்டும் பிரமுகர்களின் கேள்விக்கும் அவரது முத்தான ஒரு நாடகத்தில் வேள்வியாய் பதிலடி கொடுத்திருந்தார்.கவிதையோ சொல்லவேண்டாம். நம்பீசன் அப்பட்டமான புதுக்கவிதை கவிஞர் .
அதனால், அவருக்கு மரபுக்கவிதை எழுதத் தெரியாது என்றல்ல. சொற்கள் ஒவ்வொன்றும் கண்ணிலொற்ற வேண்டிய சொற்சிலம்பம்.
அனைத்தும் மறந்த ஸ்தம்பிதத்தில் உதிப்பதல்லவா கவிதை? பேரிலக்கியங்களே பக்குவம், முதிர்ச்சி எனக் கனமாக முரணில் பரிமாணம் என முரசு கொட்டும் வேளையில், சர்வதேச இலக்கிய அபிமானியாக., அக்கறையும், ரசனையும், கவலையுமாக, அருமையாக எழுதும் இவரது கவிதைக்கு சுமி ரசிகை மட்டுமல்ல.பரம பக்தையானதே இதற்குப்பிறகுதான். அப்படியிருக்க அவரது ஆய்வுகள் பற்றிப் பேசவும் வேண்டுமா? நாவல் வெளியில் மையத்தைச் சுழற்றிப்போடும் அகண்ட பிரவாகத்தில் அவரது மொழி சஞ்சரிக்கும் உள்தள விரிவின் கட்டுமானம், சொற்கள் நிரம்பி வழியும் நாவல்களில்கூட சாத்தியமில்லை என சுமியே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் கொண்டாடியிருக்கிறாள். அதனாலேயே இவருக்கு முன்னால் கட்டுரை வாசிப்பதை நினைக்க ஒரு கணம் பெருமிதமாகக்கூட இருந்தது.
வழக்கம்போல் பொன்னாடை இல்லை. பூமாலை இல்லை.அவரவர் இருக்கையில் அமர்ந்ததும், சொல்லி வைத்தாற்போல் நிகழ்ச்சி ஆரவாரமே இல்லாமல் குறிப்பிட்ட
நேரத்தில் தொடங்கியது .
அறிமுக உரைக்குப்பின்னர், எந்தjf பந்தாவுமே இல்லாமல் நம்பீசன் மேடையேறினார். செம்பொருள் அங்கதம் செப்பிடச் சொல்வதென்றால் அற்புதமான உரை.
பேறு பெறல் வேண்டும் இத்தகு உரைகளைக் கேட்க. அவ்வளவு அருமையாக புனைவிலக்கியம் பற்றி தெள்ளத் தெளிவாக, அமைதியாகக் கனிவாக விளக்கினார்.
சபையே பக்தி சிரத்தையோடு அவர் மொழிவெளியை உள் வாங்கியது. அடுத்து ரத்னச்சுருக்கமாய் ப் பேசிக் கட்டுரையாளர்களை மேடையேற்றினார் நிகழ்வாளர்.
முதல் அமர்வு முழுக்க முழுக்க நாடக அமர்வு. பிரகாஷ் கோரன், சிற்றம்பல வாசு, நாகம்பொறக் கோபாலகிருஷ்ணன், எனக் கட்டுரை வாசித்தார்கள்.
நிகழ்ச்சியின் கட்டுரைகளே முத்திரைப் பொன்னாக வெண் சாமரம் வீசியது உற்சாகமாக இருந்தது.
இடைவேளை தேநீருக்கு ப்பிறகு இரண்டாவது அமர்வில் முதல் கட்டுரையாளராக சுமியின் கட்டுரை. ”சிறுகதைத்துறையில் கதை கூறு திறன்“ என்பது தலைப்பு.
பெயர் விளிக்கப்பட்டதும் ஜம்மென்று போய் மைக்கைப் பிடித்தாள் என்றெழுதினால் அதைவிட அபத்தம் வேறில்லை.
மேடை சிணுக்கம் இல்லை என்றாலும்கூட சிகரமாய் நம்பீசன் சாருக்கு முன்னால் சிறப்பாக ப் பேசி முடிக்க வேணுமே எனும் கவலை இருந்தது. எல்லாம் மைக்கைப் பிடிக்கும்வரைதான். சுமி தன்னளவில் தெளிவாக இருந்தாள்.
அழகியல் கோட்பாட்டிலிருந்து, ஆழ்மனப்படிமத்தில் மீ யதார்த்தம் , மாஜிக்கல் ரியலிசம், என அ -புனைவில் வரும் இன்றைய அனைத்துப் பார்வையும் அலசல் பார்வையில் கொண்டு வந்தாள். தோற்றநிலை மெய்ம்மையில்[virtual reality]யில் வாசகனைத் தீவிரமாக வாசிக்கச் செய்யும் முயற்சிக்குப் படைப்பாளியின் பங்கு என்ன என்பதை கட்டம் போட்டு விளக்கத் தொடங்கினாள். ஒருமைப்பார்வையில் ஊடுருவல், படர்க்கைப் பன்மையில் மேலோட்டம், ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்துக்குமிடையே வரும் ஒற்றைச்சொல்லாடலில்
நுட்பம் எனக் கதை எடுத்துரைக்கும் திறனையும் விளக்கினாள். படைப்பூக்கத்துக்குப் பாத்திர வார்ப்பு என்பது முக்கியமெனில் கதையுள் மொழியுலகம் உள்ளீடற்ற ஊடுருவமல்லவே.எள்ளல், அன்பு,முதிர்ச்சி, நுண்பார்வை எனப் பல தளங்களில் உருவகத்தைத் தேடுவதுதானே வாசகனின் வேலை. புதுப்பரிமாண புலப்படலுக்கு வாசகன் முனைந்து
தேடவேண்டிய கதைக்களன் எது ? , என, இப்படித் தொடர்ந்த கட்டுரை வாசித்து முடித்து, சுமி அமர்ந்தபோது மிகவும் திருப்தியாக இருந்தது அடுத்த பத்தே நிமிடத்தில் மதிய உணவுவேளை வந்துவிட்டது. நம்பீசன்சாரைச் சுற்றிhf கூட்டம் அலை மோதியது. ஆனாலும் சிலர் நாசுக்காய் மட்டுமே அவரை நெருங்கினார்கள். ஆச்சரியமாக அவரே சிலரையெல்லாம் அழைத்துப் பேசினார். அவர்களது கட்டுரை பற்றியும் கூட சிலாகித்தார்.
சுமியிடமும் அன்பு கனியக் கனிய அவர் பேசினார். பிள்ளைத்தமிழ் கேட்ட பக்தன்போல் அகவல் கேட்ட அன்பன்போல், கலிங்கத்துப்பரணி கேட்ட கண்ணப்பன்போல், அவர் பேசப்பேச , நாத்தழுதழுக்க, சிலிர்த்துப்போய் நின்றாள் சுமி. அப்பொழுதுதான் வேகமாக அங்கு வந்த பிரகாஷ் கோரன் நம்பீசன் சாரிடம் நெருங்கி ஏதோ கேட்க முற்படுவதைக் காண முடிந்தது. அவர் கவனிக்கவில்லையா? இல்லை.
அப்பொழுதுதான் உணவு ஞாபகத்துக்கு வந்ததோ? சடாரென்று திரும்பி அழைத்தவர்களின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
கிட்டத்தட்ட ஓடி அவரை நெருங்கக் கோரன் முயற்சித்தது நடக்கவில்லை.
ஆச்சரியம். உணவு முடிந்து வரும்போதும் பிரகாஷ் கோரன் அதே இடத்தில் நின்றுகொண்டு அவரை எதிர்கொள்ளப் போனதுதான்.
அப்பொழுதும் நம்பீசன் கண் கொண்டாரில்லை. உபசாரத்துக்கு வந்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர் வர்மாவுடனேயே ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டே போய்விட்டார். செவ்விலக்கியம் வழுவாது சொல்வதென்றால் பிரகாஷ் கோரனின் முகம் பூத்து வெளிறியது என்றே சொல்லவேண்டும். ஆனால், பத்தரை மாற்றுக்குறையாத கார்மேகக் கண்ணனின் அழகு நிறம் கொண்டவர் பிரகாஷ் கோரன் என்பதால் அந்த முகத்திலிருந்து எந்த உணர்வையும் கண்டு கொள்ள முடியவில்லை.
ஒருவேளை நம்பீசன் வேண்டுமென்றே கோரனை தவிர்க்கிறாரோ? ஏன்?
சுமிக்கு நம்ப முடியவில்லை. ஏன் நம்பீசன் கோரனை அலட்சியப்படுத்துகிறார் என்பது எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
மதியத்துக்கு மேல் கவிதை அரங்கம்.அங்கும் இரண்டாமவராக பிரகாஷ் கோரன் கட்டுரை வாசித்தார். வசனக்கவிதை குறித்து இப்படி விளக்கினார்.
வசன கவிதைக்கும் தளையுண்டு. மோனமுண்டு. உருவகமுண்டு. அலங்காரம், ரிதம் என எல்லாமுமாகக் கருத்தின் வேகம் சொல்லில் தட்டினால்தான் வசன கவிதைகூட முழுமை பெறும் என நீண்டது அவரது கட்டுரை. ஏனோ இவ்விடத்து சுமிக்கு மு.மேத்தாவின் தமிழ்க் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
இலக்கணச்செங்கோல்,
யாப்புச் சிம்மாசனம்.
எதுகைப் பல்லக்கு
மோனைத்தேர்கள்,
தனிமொழிச்சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை,” என்றிட்ட வரிகளை ஆங்குக் கோடிட முடியவில்லை.
ஆனால், தன்னுடைய கட்டுரையில் சுமி முழுக்க முழுக்க ஆற்றூர் ரவிவர்மா, பாலாச்சந்திரன் சுள்ளிக்காடு, அய்யப்ப பணிக்கர் போன்றோரின் கவிதைகளையே மேற்கோள் காட்டினாள். கவியரங்கம் முடிந்திட, இலக்கியக் கலந்துரையாடல் அதிரூபகரமாய் மிகவும் எதிர்பார்ப்போடே நிகழ்ந்தேறியது. வாசகர்கள் மட்டுமின்றி படைப்பாளிகளும்கூட
கலந்துகொண்டது அவ்வளவு நிறைவாக இருந்தது. நம்பீசன் சாரே பல கேள்விகட்கும் ரசித்துjf பதில் கூறினார்,. சுமியை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமான கேள்வி, ” ஆசை பற்றி அறையலுற்ற” கவிதையில் படிமம் எங்கே என்பதுதான்?
சுமி நிறுத்தி நிதானித்து விளக்கினாள்.
வசனமாகட்டும்? வரிகளாகட்டும்? எதுகை, மோனை, சந்தத்தால் கிட்டிய ஸ்தூல நிலையிலிருந்து சூட்சும நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதையில் சொற்களைத் தொடுக்கும் ஜாலமே வாசகனை சிந்திக்கத் தூண்டுமாயின் அந்த படிமம்தானே கவிதையின் ஊற்றுமுகம்.அதைவிட படிமத்துக்கு வேலை என்ன ?
அதற்குள் ஆங்கிலத்திலும் விளக்கம் கேட்கப்பட முத்துக்கொட்டிய வரிகளாய் வந்து விழுந்தது சுமியிடமிருந்து இப்படி--
" The reader who is illuminated is, in a real sense the poem !"
அவையோர் படபடவென்று கைத் தட்டி ஆர்ப்பரித்ததில் சுமிக்கு, மகிழ்ச்சியில் கண்கள் லேசாய் நிரம்பிவிட்டது. அடுத்த கேள்வி அதிவிட கூர்மையாய் வந்தது.
உடனே பிரகாஷ் கோரன் கவிதையில் மடித்துப்போடும் லயம் பற்றிப் பேசிய விளக்கமாய்ப் பேசியது மிகவும் நிறைவாக இருந்தது.
கேள்விகள் தொடரத் தொடர கோரன் மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருக்க நம்பீசன் சார் ஏனோ எழுந்து விட்டார். அதற்குள் மாலையாகிவிட்டது.
அவரவரும் அறைக்குத் திரும்ப, உடன் வந்த கவிதாயினி ராஜலெட்சுமி அந்தர்ஜனம் கோரனின் கவிப்புலம் பற்றிப்பேசினார்.
இந்த நூற்றாண்டின் அருமைமிகு கவிஞன் கோரன் என்ற அந்தர்ஜனத்தின் மதிப்பீடை அப்படியே ஏற்றுக்கொள்வதில் சுமிக்கு ஆட்சேபனை இருக்கவில்லை.
இப்படிப்பட்ட கோரனிடம் நம்பீசன் சாரின் அலட்சியம் என்னவாயிருக்கும் என்று அந்தர்ஜனத்திடம் கேட்கலாமோ என்று கூடத் தோன்றிவிட்டது.
அதற்குள் வேறொரு அன்பர் சுமியிடம் பேச வர, நேரமிருக்கவில்லை.
இலக்கியம், இசை என வாழுமிடத்து இறைமை பூரணமாய் சூழ்ந்திருக்கும் என்பது ஐதீகம். ஆனால் மனிதர்கள்...?
ஹ்ம்ம்.
அமர்க்களமாக இரவு விருந்துக்குத் தயாராகி விருந்து மண்டபத்தில் சுமி வந்து சேர்ந்தபோது எதிரே வந்த கோரன் எங்கோ வேகமாய் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் ஏதோ பொதிபோல் எடுத்துக்கொண்டு ஓடினார். சுமிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
அதற்குள் இரவுவிருந்து தொடங்கிவிட்டது. உணவு வகைகளில் எல்லாமே சப்பாத்தி, பூரி, குழலப்பம், வாட்டிய தோசை, கல்தோசை, வெந்தய தோசை, மணிப்பிட்டு , இடியப்பம் என்றே நிரம்பி இருந்தது, கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. இரவில் ஒருபிடி சாதமாவது இல்லையென்றால் இரவில் கண் அடையாது சுமிக்கு. வேறுவழி?
உலகிலேயே சுமிக்குப்பிடிக்காத ஒரு உணவு வகை உண்டென்றால் அது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிடுவதைவிடப் பட்டினி கிடக்கவும் அவள் தயார். சூடு சாயையும், சுடச்சுட தட்டில் வந்து விழுந்த நெய்மினுங்கும் வாட்டிய தோசையில், உள்ளிச் சட்டினியைத் தொட்டு, மெல்லப் பிட்டு சாப்பி டத்தொடங்கியபோது, ஆண்கள் கையில் மதுவோடு பொறித்த கோழியும் , வறுத்த துண்டம் மீனுமாய், உல்லாசமாகப் பேசத் தொடங்கிவிட்டாரகள். மினுமினுவென அவர்கள் பரவசம் பார்த்துக்கொண்டே சுமி, வாசல் பக்கம் வந்தபோது கோரன் சிரித்த முகத்தோடு வந்து கொண்டிருந்தார்.
”தவிடு ஒத்தடம் கொடுத்தால் எந்த ஆஸ்துமாவும் ஒரு நிமிடமாவது நின்று நிதானித்து, அப்படியே வந்த வழியே ஓடிப்போய்விடும் என்பது எந்த கிராமத்தானுக்கும் தெரியுமே ? இன்று லண்டனில் வாழ்ந்தாலும் , ஒரு காலத்தில் கிருஷியிலும் காட்டிலும் வளர்ந்தவன்தானே நான்! எனக்கெப்படி தெரியாமல் போகும்? இதற்காகப் போய் மருத்துவரிடமெல்லாம் போகவேண்டிய அவசியமென்ன? என்று சர்வ சாதாரணமாக கோரன் கேட்க,
” என்றாலும் இன்ஹேலர் இல்லாமல் நம்பீசன் தவித்துப்போய் விட்டார். நல்ல நேரத்தில் வந்து உதவினீர்கள் ? ” என்று ஏற்பாட்டாளர் மனமுருக, கோரன் அப்படியே அந்தப் பேச்சைத் தவிர்த்தார்.
”இதை இத்தோடு விட்டு விடுங்கள் சார், பாவம் நம்பீசன் சாருக்கு இந்தத் தகவல் வெளியே கசிந்தாலே கஷ்டமாயிருக்கும், நீங்கள் போய் அவருக்கு துணையிருங்கள். அரை மணிநேரத்துக்குப்பிறகு அவரை விருந்துக்கு அழைத்து வரலாம். ஒன்றும் ஆகாது.கவலைப்படவேண்டாம்.”
சுமி விருந்து மண்டபத்துக்குள் வேகம் வேகமாக நடந்து வரும் கோரனைக் கவனித்தாள். கோரன் இவளைக் கவனிக்கவில்லை.
சுமிக்கு ஏக்கமாகப் போய்விட்டது. கோரன் கிட்டே வந்தாலே “ தீண்டல்“ எனப் பகலெல்லாம் கோரனை அப்படிப் புறக்கணித்த நம்பீசன் சார் எப்படி இதை அனுமதித்தார் ? நெஞ்சில், தவிட்டு ஒத்தடத்தை கோரன் அன்பொழுக ஒத்திக்கொண்டிருந்தபோது, நம்பீசன் சாரின் திருமுகம் எப்படி இருந்திருக்கும்? அதைக் காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே?
சிங்கப்பூர் வாசியான சுமிக்குப் புரியாத புதிர் சிதறு மூட்டையாய் அவிழ்ந்து சிதற, ஏனோ சிரிப்பு வந்தது.சலனமற்ற முகத்தோடு பிரகாஷ் கோரன் இவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.
விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்தப் புத்தகம்.
வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூடத் தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன்போல் பார்த்துப் பார்த்துத் தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன.
ஆனால், இந்த பூம்பட்டு புத்தகம் மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான்.
எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது? கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ?
கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும் சுமிக்கு, தோள் பையில் அந்தர் தியானமாகிப்போன புத்தகம்
கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம்தான்.
அந்தக் கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்குச் சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.!
என்னமோ சந்திர மண்டலத்துக்குப் போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும்.
இந்தா இருக்கும் கேரளா. கண்மூடிக் கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள்.
மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே?
அரைக்கண் உறக்கத்தில், ஏதோ ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை ஞாபகப்படுத்துகிறாள் விமானப் பணிப்பெண்.
அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட !
அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டுவிட்டாள்.
குளித்து, ஜெபித்து, நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.
கேரளத்தில் கால் வைத்த நிமிடத்திலிருந்தே மழைதான். இரவெல்லாம் அப்படிப் பொழிந்து தள்ளியது.விடியலிலாவது சற்றுமட்டுப்படும் என்று எண்ணிய கனவு பலிக்கவில்லை.
கோழிக்கோடு விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியே வந்தபோது , கூந்தலிலிருந்து ஈரம் இன்னும் சொட்டிக்கொண்டிருந்தது.
பல்கலைக்கழக வளாகம் அருகில்தான். ஆனால், அதற்குமுன்னர் காலை உணவுக்குச் செல்லவேண்டும். எங்கே, எப்படி, எந்தப் பக்கம் போக என்று ஒருவினாடி திகைத்து நிற்க,
” நமஸ்காரம் சேச்சி, சுமி ஃப்ரொம் சிங்கப்பூர் தானே?” என்று கணீர்க்குரலில் எதிரில் வந்து நின்ற இளைஞன், லண்டலிருந்து வந்த நாடகாசிரியன் பிரகாஷ் கோரன்.
முதல் நாள் இரவு விருந்தில் பரஸ்பரம் அறிமுகம் செய்விக்கப்பட்டபோது பார்த்த ஞாபகம் இருந்தது.
தலித்திய சமூகத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்து, முன்னேறி, இன்று லண்டனில் நாடகவியல் ஆசிரியராகவும், சுய கலைக்குழுப் பிரமாணியாகவும் வாழும் கோரன் கேரளத்தை மிகவும் நேசிப்பவன். தாய்நாட்டின் ஏக்கம் காரணமாகவே எல்லா இலக்கிய நிகழ்விலும் தவறாது கலந்துகொள்பவன்.
’ மண்பாசத்துக்கு நான் அடிமை சேச்சி”, என்றவன்,
” காலை உணவுக்குப்போக வேண்டிய வழி இந்த பக்கம்!” என்று
சுமியோடு சரளமாகப் பேசிக்கொண்டே காலை உணவைச் சுவைத்தான். மணிப்பிட்டும் கடலைக்கறியும், பப்படமும் கூட்டி அவன் ரசித்து உண்டான்.
சுமிக்குப் பிட்டுக்கு வாழைப்பழமும் சர்க்கரையும்தான் பாந்தம். அங்கு கதலிப்பழம் இருந்தது. சர்க்கரை தீர்ந்து போயிருந்தது. உடனே உப்பி அழகாய் அடுக்கப்பட்ட பால் அப்பம், கண்ணில் பட நாளிரம் சட்டினியும், பொடி மணலாய் உருக்கிய நெய்யும், அருகிலிருந்த தேன் சிறிதும் ஊற்றி, மனம் கனிந்து சாப்பிடத்தொடங்கியபோது சிங்கப்பூர் ஞாபகம் வந்தது. கணவர் இந்நேரம் காலையாகாரம் சாப்பிடிருப்பாரோ, என்ற கவலை ஆக்கிரமிக்க, இந்தக் கவலையே கணவருக்குப் பிடிக்காது என்ற நினைப்பு வர, சுவையான பால் அப்பத்தை கையிலெடுத்தாள். அப்பம் சாப்பிட்டு கடுப்பம் சாய சுடச்சுட குடித்தபோது, பலரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
உற்சாகமாக அரங்க வளாகத்தினுள் நுழைந்தபோது தாலப்பொலியும், செண்டை கொட்டும், குரவையுமாய், படைப்பாளிகளை வரவேற்ற பாங்கு நெஞ்சில் பாகாய் இனித்தது.
அதைவிட மகிழ்ச்சி பார்க்குமிடமெல்லாம், நுனியில் முடிச்சிட்ட ஈரக்கூந்தலும், நெற்றியில் கோபிச்சந்தனக் குறியுமாய், கஷவு முண்டும் நேரியலுமணிந்த பெண்களும், வெள்ளை வேஷ்டியும், முழுநீள ஷர்ட்டும் அணிந்த ஆண்களுமாய், எங்கும் வியாபித்திருந்த மலையாள மணம் காணக்காண கண்களுக்கு தெவிட்டவேயில்லை..
சிங்கப்பூரிலேயே சுமி முண்டு அணியும் பழக்கம் உள்ளவள்தான். பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் அவளுக்கு அப்படி ஒரு பித்து.
அதனாலேயே ” சிங்கப்பூரிலிருந்து வரும் சேச்சியை இப்படி முண்டு செட்டில் எதிர்பார்க்கவில்லை, !” என்று பிரகாஷ் கோரன் வியந்ததை அவள் பொருட்படுத்தவில்லை.
அதற்குள் முல்லைப்புள்ளி நம்பீசன் வந்துவிட்டார் என்றறிந்து அவையே எழுந்து நிற்க, கோபத்துடன் ,இந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை,” என அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு, மேடையில் அவருக்காக இருந்த இருக்கையில் அமராமல், சக படைப்பாளிகளோடு வந்தமர்ந்தவரை வியந்துபோய் பார்த்தாள் சுமி. பொல்லென்று வெளுத்ததலைமுடியும், கம்பீரம் மாறாத தோற்றமுமாய்ச் சிவந்த நிறத்தில் கையெடுத்து வணங்கத் தக்கவராய் நம்பீசன் அமர்ந்திருந்தார்.
சுமி பக்தியில் சிலிர்த்துப்போய் அவரையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.எத்தனை ஆண்டுகளாக இந்த மாமனிதரைச் சந்திக்க இவள் ஏங்கியிருக்கிறாள். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளைச் சந்தித்தபோதெல்லாம் அவர்கள் ஆவலுடன் விசாரிக்கும் மலையாளப் பெயர் முல்லைப்புள்ளி நம்பீசன் பற்றி மட்டுமே.
சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, ஆய்வு என அவர் தடம் பதிக்காத துறையே இல்லை. சினிமாவிலிருந்து வந்த அழைப்புக்கு மட்டும் அவரை அசைக்க முடியவில்லை.
என் களம் சினிமா அல்ல, என்று ஒற்றை வீச்சில் மறுதலித்தவர். இவர் பெயர் தவிர்த்த ஓர் ஆய்விலக்கியம், மொழியியலில் எழுத முடியுமா எனுமளவுக்கு அழுத்தம் திருத்தமாய் பெயர் பதித்தவர்.
இந்த நிகழ்வில் மிகப்பெரிய பெருமிதமே நம்பீசன் சார்தான். அவர்தான் சிறப்புரையாளரும் கூட. அவரது சிறுகதை “யக்ஞம்” வாசித்த அனுபவத்தைச் சுமியால் இன்றும் மறக்க இயலாது. அப்படிப் பரிதவித்து அழுதிருக்கிறாள். பெண்மையின் மாதுர்யம், மோனம், முணுமுணுப்பு, தாபம் என, இதையெல்லாம் கூட, இவ்வளவு சூட்சுமமாய் ஓர் ஆண்மகனால் எழுத முடியுமா என்று விக்கித்துப்போயிருக்கிறாள். அதுவே, அறிவியலில் அவரது கதைஞானம் இதுவரை எந்த வித்தகனுமே முயன்றிராத அசாத்யம். சமூகப்பிரக்ஞை, சமுதாய சிந்தனை எங்கே என்று அலட்டும் பிரமுகர்களின் கேள்விக்கும் அவரது முத்தான ஒரு நாடகத்தில் வேள்வியாய் பதிலடி கொடுத்திருந்தார்.கவிதையோ சொல்லவேண்டாம். நம்பீசன் அப்பட்டமான புதுக்கவிதை கவிஞர் .
அதனால், அவருக்கு மரபுக்கவிதை எழுதத் தெரியாது என்றல்ல. சொற்கள் ஒவ்வொன்றும் கண்ணிலொற்ற வேண்டிய சொற்சிலம்பம்.
அனைத்தும் மறந்த ஸ்தம்பிதத்தில் உதிப்பதல்லவா கவிதை? பேரிலக்கியங்களே பக்குவம், முதிர்ச்சி எனக் கனமாக முரணில் பரிமாணம் என முரசு கொட்டும் வேளையில், சர்வதேச இலக்கிய அபிமானியாக., அக்கறையும், ரசனையும், கவலையுமாக, அருமையாக எழுதும் இவரது கவிதைக்கு சுமி ரசிகை மட்டுமல்ல.பரம பக்தையானதே இதற்குப்பிறகுதான். அப்படியிருக்க அவரது ஆய்வுகள் பற்றிப் பேசவும் வேண்டுமா? நாவல் வெளியில் மையத்தைச் சுழற்றிப்போடும் அகண்ட பிரவாகத்தில் அவரது மொழி சஞ்சரிக்கும் உள்தள விரிவின் கட்டுமானம், சொற்கள் நிரம்பி வழியும் நாவல்களில்கூட சாத்தியமில்லை என சுமியே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் கொண்டாடியிருக்கிறாள். அதனாலேயே இவருக்கு முன்னால் கட்டுரை வாசிப்பதை நினைக்க ஒரு கணம் பெருமிதமாகக்கூட இருந்தது.
வழக்கம்போல் பொன்னாடை இல்லை. பூமாலை இல்லை.அவரவர் இருக்கையில் அமர்ந்ததும், சொல்லி வைத்தாற்போல் நிகழ்ச்சி ஆரவாரமே இல்லாமல் குறிப்பிட்ட
நேரத்தில் தொடங்கியது .
அறிமுக உரைக்குப்பின்னர், எந்தjf பந்தாவுமே இல்லாமல் நம்பீசன் மேடையேறினார். செம்பொருள் அங்கதம் செப்பிடச் சொல்வதென்றால் அற்புதமான உரை.
பேறு பெறல் வேண்டும் இத்தகு உரைகளைக் கேட்க. அவ்வளவு அருமையாக புனைவிலக்கியம் பற்றி தெள்ளத் தெளிவாக, அமைதியாகக் கனிவாக விளக்கினார்.
சபையே பக்தி சிரத்தையோடு அவர் மொழிவெளியை உள் வாங்கியது. அடுத்து ரத்னச்சுருக்கமாய் ப் பேசிக் கட்டுரையாளர்களை மேடையேற்றினார் நிகழ்வாளர்.
முதல் அமர்வு முழுக்க முழுக்க நாடக அமர்வு. பிரகாஷ் கோரன், சிற்றம்பல வாசு, நாகம்பொறக் கோபாலகிருஷ்ணன், எனக் கட்டுரை வாசித்தார்கள்.
நிகழ்ச்சியின் கட்டுரைகளே முத்திரைப் பொன்னாக வெண் சாமரம் வீசியது உற்சாகமாக இருந்தது.
இடைவேளை தேநீருக்கு ப்பிறகு இரண்டாவது அமர்வில் முதல் கட்டுரையாளராக சுமியின் கட்டுரை. ”சிறுகதைத்துறையில் கதை கூறு திறன்“ என்பது தலைப்பு.
பெயர் விளிக்கப்பட்டதும் ஜம்மென்று போய் மைக்கைப் பிடித்தாள் என்றெழுதினால் அதைவிட அபத்தம் வேறில்லை.
மேடை சிணுக்கம் இல்லை என்றாலும்கூட சிகரமாய் நம்பீசன் சாருக்கு முன்னால் சிறப்பாக ப் பேசி முடிக்க வேணுமே எனும் கவலை இருந்தது. எல்லாம் மைக்கைப் பிடிக்கும்வரைதான். சுமி தன்னளவில் தெளிவாக இருந்தாள்.
அழகியல் கோட்பாட்டிலிருந்து, ஆழ்மனப்படிமத்தில் மீ யதார்த்தம் , மாஜிக்கல் ரியலிசம், என அ -புனைவில் வரும் இன்றைய அனைத்துப் பார்வையும் அலசல் பார்வையில் கொண்டு வந்தாள். தோற்றநிலை மெய்ம்மையில்[virtual reality]யில் வாசகனைத் தீவிரமாக வாசிக்கச் செய்யும் முயற்சிக்குப் படைப்பாளியின் பங்கு என்ன என்பதை கட்டம் போட்டு விளக்கத் தொடங்கினாள். ஒருமைப்பார்வையில் ஊடுருவல், படர்க்கைப் பன்மையில் மேலோட்டம், ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்துக்குமிடையே வரும் ஒற்றைச்சொல்லாடலில்
நுட்பம் எனக் கதை எடுத்துரைக்கும் திறனையும் விளக்கினாள். படைப்பூக்கத்துக்குப் பாத்திர வார்ப்பு என்பது முக்கியமெனில் கதையுள் மொழியுலகம் உள்ளீடற்ற ஊடுருவமல்லவே.எள்ளல், அன்பு,முதிர்ச்சி, நுண்பார்வை எனப் பல தளங்களில் உருவகத்தைத் தேடுவதுதானே வாசகனின் வேலை. புதுப்பரிமாண புலப்படலுக்கு வாசகன் முனைந்து
தேடவேண்டிய கதைக்களன் எது ? , என, இப்படித் தொடர்ந்த கட்டுரை வாசித்து முடித்து, சுமி அமர்ந்தபோது மிகவும் திருப்தியாக இருந்தது அடுத்த பத்தே நிமிடத்தில் மதிய உணவுவேளை வந்துவிட்டது. நம்பீசன்சாரைச் சுற்றிhf கூட்டம் அலை மோதியது. ஆனாலும் சிலர் நாசுக்காய் மட்டுமே அவரை நெருங்கினார்கள். ஆச்சரியமாக அவரே சிலரையெல்லாம் அழைத்துப் பேசினார். அவர்களது கட்டுரை பற்றியும் கூட சிலாகித்தார்.
சுமியிடமும் அன்பு கனியக் கனிய அவர் பேசினார். பிள்ளைத்தமிழ் கேட்ட பக்தன்போல் அகவல் கேட்ட அன்பன்போல், கலிங்கத்துப்பரணி கேட்ட கண்ணப்பன்போல், அவர் பேசப்பேச , நாத்தழுதழுக்க, சிலிர்த்துப்போய் நின்றாள் சுமி. அப்பொழுதுதான் வேகமாக அங்கு வந்த பிரகாஷ் கோரன் நம்பீசன் சாரிடம் நெருங்கி ஏதோ கேட்க முற்படுவதைக் காண முடிந்தது. அவர் கவனிக்கவில்லையா? இல்லை.
அப்பொழுதுதான் உணவு ஞாபகத்துக்கு வந்ததோ? சடாரென்று திரும்பி அழைத்தவர்களின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
கிட்டத்தட்ட ஓடி அவரை நெருங்கக் கோரன் முயற்சித்தது நடக்கவில்லை.
ஆச்சரியம். உணவு முடிந்து வரும்போதும் பிரகாஷ் கோரன் அதே இடத்தில் நின்றுகொண்டு அவரை எதிர்கொள்ளப் போனதுதான்.
அப்பொழுதும் நம்பீசன் கண் கொண்டாரில்லை. உபசாரத்துக்கு வந்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர் வர்மாவுடனேயே ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டே போய்விட்டார். செவ்விலக்கியம் வழுவாது சொல்வதென்றால் பிரகாஷ் கோரனின் முகம் பூத்து வெளிறியது என்றே சொல்லவேண்டும். ஆனால், பத்தரை மாற்றுக்குறையாத கார்மேகக் கண்ணனின் அழகு நிறம் கொண்டவர் பிரகாஷ் கோரன் என்பதால் அந்த முகத்திலிருந்து எந்த உணர்வையும் கண்டு கொள்ள முடியவில்லை.
ஒருவேளை நம்பீசன் வேண்டுமென்றே கோரனை தவிர்க்கிறாரோ? ஏன்?
சுமிக்கு நம்ப முடியவில்லை. ஏன் நம்பீசன் கோரனை அலட்சியப்படுத்துகிறார் என்பது எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
மதியத்துக்கு மேல் கவிதை அரங்கம்.அங்கும் இரண்டாமவராக பிரகாஷ் கோரன் கட்டுரை வாசித்தார். வசனக்கவிதை குறித்து இப்படி விளக்கினார்.
வசன கவிதைக்கும் தளையுண்டு. மோனமுண்டு. உருவகமுண்டு. அலங்காரம், ரிதம் என எல்லாமுமாகக் கருத்தின் வேகம் சொல்லில் தட்டினால்தான் வசன கவிதைகூட முழுமை பெறும் என நீண்டது அவரது கட்டுரை. ஏனோ இவ்விடத்து சுமிக்கு மு.மேத்தாவின் தமிழ்க் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
இலக்கணச்செங்கோல்,
யாப்புச் சிம்மாசனம்.
எதுகைப் பல்லக்கு
மோனைத்தேர்கள்,
தனிமொழிச்சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை,” என்றிட்ட வரிகளை ஆங்குக் கோடிட முடியவில்லை.
ஆனால், தன்னுடைய கட்டுரையில் சுமி முழுக்க முழுக்க ஆற்றூர் ரவிவர்மா, பாலாச்சந்திரன் சுள்ளிக்காடு, அய்யப்ப பணிக்கர் போன்றோரின் கவிதைகளையே மேற்கோள் காட்டினாள். கவியரங்கம் முடிந்திட, இலக்கியக் கலந்துரையாடல் அதிரூபகரமாய் மிகவும் எதிர்பார்ப்போடே நிகழ்ந்தேறியது. வாசகர்கள் மட்டுமின்றி படைப்பாளிகளும்கூட
கலந்துகொண்டது அவ்வளவு நிறைவாக இருந்தது. நம்பீசன் சாரே பல கேள்விகட்கும் ரசித்துjf பதில் கூறினார்,. சுமியை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமான கேள்வி, ” ஆசை பற்றி அறையலுற்ற” கவிதையில் படிமம் எங்கே என்பதுதான்?
சுமி நிறுத்தி நிதானித்து விளக்கினாள்.
வசனமாகட்டும்? வரிகளாகட்டும்? எதுகை, மோனை, சந்தத்தால் கிட்டிய ஸ்தூல நிலையிலிருந்து சூட்சும நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதையில் சொற்களைத் தொடுக்கும் ஜாலமே வாசகனை சிந்திக்கத் தூண்டுமாயின் அந்த படிமம்தானே கவிதையின் ஊற்றுமுகம்.அதைவிட படிமத்துக்கு வேலை என்ன ?
அதற்குள் ஆங்கிலத்திலும் விளக்கம் கேட்கப்பட முத்துக்கொட்டிய வரிகளாய் வந்து விழுந்தது சுமியிடமிருந்து இப்படி--
" The reader who is illuminated is, in a real sense the poem !"
அவையோர் படபடவென்று கைத் தட்டி ஆர்ப்பரித்ததில் சுமிக்கு, மகிழ்ச்சியில் கண்கள் லேசாய் நிரம்பிவிட்டது. அடுத்த கேள்வி அதிவிட கூர்மையாய் வந்தது.
உடனே பிரகாஷ் கோரன் கவிதையில் மடித்துப்போடும் லயம் பற்றிப் பேசிய விளக்கமாய்ப் பேசியது மிகவும் நிறைவாக இருந்தது.
கேள்விகள் தொடரத் தொடர கோரன் மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருக்க நம்பீசன் சார் ஏனோ எழுந்து விட்டார். அதற்குள் மாலையாகிவிட்டது.
அவரவரும் அறைக்குத் திரும்ப, உடன் வந்த கவிதாயினி ராஜலெட்சுமி அந்தர்ஜனம் கோரனின் கவிப்புலம் பற்றிப்பேசினார்.
இந்த நூற்றாண்டின் அருமைமிகு கவிஞன் கோரன் என்ற அந்தர்ஜனத்தின் மதிப்பீடை அப்படியே ஏற்றுக்கொள்வதில் சுமிக்கு ஆட்சேபனை இருக்கவில்லை.
இப்படிப்பட்ட கோரனிடம் நம்பீசன் சாரின் அலட்சியம் என்னவாயிருக்கும் என்று அந்தர்ஜனத்திடம் கேட்கலாமோ என்று கூடத் தோன்றிவிட்டது.
அதற்குள் வேறொரு அன்பர் சுமியிடம் பேச வர, நேரமிருக்கவில்லை.
இலக்கியம், இசை என வாழுமிடத்து இறைமை பூரணமாய் சூழ்ந்திருக்கும் என்பது ஐதீகம். ஆனால் மனிதர்கள்...?
ஹ்ம்ம்.
அமர்க்களமாக இரவு விருந்துக்குத் தயாராகி விருந்து மண்டபத்தில் சுமி வந்து சேர்ந்தபோது எதிரே வந்த கோரன் எங்கோ வேகமாய் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் ஏதோ பொதிபோல் எடுத்துக்கொண்டு ஓடினார். சுமிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
அதற்குள் இரவுவிருந்து தொடங்கிவிட்டது. உணவு வகைகளில் எல்லாமே சப்பாத்தி, பூரி, குழலப்பம், வாட்டிய தோசை, கல்தோசை, வெந்தய தோசை, மணிப்பிட்டு , இடியப்பம் என்றே நிரம்பி இருந்தது, கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. இரவில் ஒருபிடி சாதமாவது இல்லையென்றால் இரவில் கண் அடையாது சுமிக்கு. வேறுவழி?
உலகிலேயே சுமிக்குப்பிடிக்காத ஒரு உணவு வகை உண்டென்றால் அது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிடுவதைவிடப் பட்டினி கிடக்கவும் அவள் தயார். சூடு சாயையும், சுடச்சுட தட்டில் வந்து விழுந்த நெய்மினுங்கும் வாட்டிய தோசையில், உள்ளிச் சட்டினியைத் தொட்டு, மெல்லப் பிட்டு சாப்பி டத்தொடங்கியபோது, ஆண்கள் கையில் மதுவோடு பொறித்த கோழியும் , வறுத்த துண்டம் மீனுமாய், உல்லாசமாகப் பேசத் தொடங்கிவிட்டாரகள். மினுமினுவென அவர்கள் பரவசம் பார்த்துக்கொண்டே சுமி, வாசல் பக்கம் வந்தபோது கோரன் சிரித்த முகத்தோடு வந்து கொண்டிருந்தார்.
”தவிடு ஒத்தடம் கொடுத்தால் எந்த ஆஸ்துமாவும் ஒரு நிமிடமாவது நின்று நிதானித்து, அப்படியே வந்த வழியே ஓடிப்போய்விடும் என்பது எந்த கிராமத்தானுக்கும் தெரியுமே ? இன்று லண்டனில் வாழ்ந்தாலும் , ஒரு காலத்தில் கிருஷியிலும் காட்டிலும் வளர்ந்தவன்தானே நான்! எனக்கெப்படி தெரியாமல் போகும்? இதற்காகப் போய் மருத்துவரிடமெல்லாம் போகவேண்டிய அவசியமென்ன? என்று சர்வ சாதாரணமாக கோரன் கேட்க,
” என்றாலும் இன்ஹேலர் இல்லாமல் நம்பீசன் தவித்துப்போய் விட்டார். நல்ல நேரத்தில் வந்து உதவினீர்கள் ? ” என்று ஏற்பாட்டாளர் மனமுருக, கோரன் அப்படியே அந்தப் பேச்சைத் தவிர்த்தார்.
”இதை இத்தோடு விட்டு விடுங்கள் சார், பாவம் நம்பீசன் சாருக்கு இந்தத் தகவல் வெளியே கசிந்தாலே கஷ்டமாயிருக்கும், நீங்கள் போய் அவருக்கு துணையிருங்கள். அரை மணிநேரத்துக்குப்பிறகு அவரை விருந்துக்கு அழைத்து வரலாம். ஒன்றும் ஆகாது.கவலைப்படவேண்டாம்.”
சுமி விருந்து மண்டபத்துக்குள் வேகம் வேகமாக நடந்து வரும் கோரனைக் கவனித்தாள். கோரன் இவளைக் கவனிக்கவில்லை.
சுமிக்கு ஏக்கமாகப் போய்விட்டது. கோரன் கிட்டே வந்தாலே “ தீண்டல்“ எனப் பகலெல்லாம் கோரனை அப்படிப் புறக்கணித்த நம்பீசன் சார் எப்படி இதை அனுமதித்தார் ? நெஞ்சில், தவிட்டு ஒத்தடத்தை கோரன் அன்பொழுக ஒத்திக்கொண்டிருந்தபோது, நம்பீசன் சாரின் திருமுகம் எப்படி இருந்திருக்கும்? அதைக் காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே?
சிங்கப்பூர் வாசியான சுமிக்குப் புரியாத புதிர் சிதறு மூட்டையாய் அவிழ்ந்து சிதற, ஏனோ சிரிப்பு வந்தது.சலனமற்ற முகத்தோடு பிரகாஷ் கோரன் இவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.
கமலாதேவி அரவிந்தன்
முற்றும்
நடந்து முடிந்தது நனவுதான் என்று மாணிக்கத்தால் அவ்வளவு எளிதில் நம்பமுடியவில்லை, என்றாலும் அவன் கையில் இருந்த பணம் உண்மையை உறுதிப்படுத்தத் தவறவில்லை.
வேலு திரும்பிப் போய் வெகு நேரமாகிவிட்டது. மாணிக்கம் இன்னும் இயல்பான நிலைக்குத் திரும்பவில்லை. அந்த அளவிற்கு வேலு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான்.
‘இப்படியும் நடக்குமா.?’ தன் மனதிற்குள் வினவியவாறே மாணிக்கம் தன் இருக்கையில் வந்தமர்ந்தான். அந்த வினவலிலேயே எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டதில் ஏற்பட்ட நிறைவும் கலந்திருந்தது.
கையைவிட்டுப் போன பணம் திரும்பவும் பையை வந்தடைவதென்றால் இந்தக் காலத்தில் நம்பக்கூடிய காரியமா?
அடுத்த வாரம் தருகிறேன் என்று வேலு கடனாகப் பெற்றுச் சென்ற பணம், ஆறு மாதங்கள்
அலையாய் அலைந்த போதும் கிடைக்காது போய், தொலையட்டும் என்று நட்டக்கணக்கில் எழுதிவிட்ட நிலையில், திடீரென்று திரும்பக்
கிடைப்பதென்றால் மாணிக்கம் அதிர்ந்து போகாமல் என்ன செய்வான்?
“நல்லவேளை! பணத்தைத் திருப்பிக்
கொடுக்க வேண்டும் என்பது மறக்காமல் இருந்ததே....”
வீட்டுப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் எண்ணியெண்ணி அவன் அலுத்துவிட்டான். ‘வீட்டில் இல்லை, நாளைக்கு வரச்சொன்னார்...,
இப்போதுதான் வெளியே போனார்...அடுத்தவாரம் வாருங்களேன், சம்பளமாயிற்றே...!’ இவ்வாறு வேலுவின் மனைவியிடம் கேட்டுக்கேட்டு இறுதியில் அவளைச் சந்திப்பதற்கே வெட்கப்படும் அளவிற்கு மாணிக்கம் அலைந்ததுதான் மிச்சம்.
‘நான்கு எண்’ லாட்டரியில்
கொஞ்சம் பணம் கிடைத்ததால் இதுவும் கைக்கு வந்தது. இல்லை என்றால்
அம்போதான். ‘ம்...வாங்கிய கடனைத்
திருப்பித்தர அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டியிருக்கிறது. கிடைத்த வரை சரி...’ என்று மாணிக்கம்
நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
உண்மையில் மாணிக்கத்திற்கும் பணமுடைதான். அவசரமாக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது.
‘இந்தப் பணத்தைக் கொண்டு முதலில் என்ன செய்யலாம்...?’ என்று மாணிக்கம் எண்ணிப் பார்த்தான்.
பணம் கையில் இருந்தால் மனிதமனம் செலவைப் பற்றித்தானே எண்ணிப் பார்க்கிறது. சேமிப்பை நினைக்கிறதா? மாணிக்கமும் விதிவிலக்கில்லைதான்.
செலவைப் பற்றி எண்ணியதும் நீருக்குள் அமுக்கப்பட்ட பந்து திமிறிக்கொண்டு மேலெழுந்து வருவதைப்போல், மாணிக்கத்தின் ஒரே மகள் மலர்மணியின் அழகு முகம்தான் முதலில் மனத்திரையில் தோன்றியது.
மலர்மணி ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். மிகவும் அறிவாற்றல் நிரம்பிய பெண். அவளுக்கு இயல்பாகவே
நூல்கள் படிப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது; மிகவிரைவாகவும் படிப்பாள்.
ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத்தான் வைப்பாள். அவள் அறிவுப்பசி
எப்போதும் அடங்காததாய் இருந்தது.
‘ஹார்டி சிறுவர் கதைகள்’ என்ற தொகுதியை
ஆறாம் வகுப்பிற்குச் செல்வதற்குள் படித்து முடித்து விட வேண்டுமென்று மலர்மணி தீவிரமாக இருந்தாள். பள்ளி நூலகத்திலும், தேசிய நூலகத்திலும் சேர்ந்தாற்போல் அந்நூல் வரிசையாகக் கிடைப்பதில்லை. எனவே சொந்தமாக வாங்கித் தருமாறு மாணிக்கத்திடம் எத்தனையோ முறைகள் சொல்லி விட்டாள்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட அந்தக் கதை வரிசை நூல்களை வாங்கவும், அவற்றையும் ஏற்கனவே
வாங்கியுள்ள கதைப் புத்தகங்களையும் வைப்பதற்கு ஓர் அலமாறியை வாங்கவும் போதிய பணம் இல்லாததால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான்.
‘சரி, முதல்
வேலையாகக் குழந்தை படிப்பதற்கு வழி செய்துவிட வேண்டும். மற்றதெல்லாம் பிறகுதான்...’
என்று எண்ணியபோதே, அதை உடனடியாகச் செய்துவிட வேண்டுமென்று தீவிரமான உந்துதல் ஏற்பட்டது.
மாலை ஆறரை மணிக்கெல்லாம் ‘எம்.பி.ஹெச்’ மூடிவிடுவார்கள்
என்பதால், உடனே விரைந்து
புத்தகங்களை வாங்கிவிட வேண்டுமென்று தோன்றிய உடனே, மேலதிகாரியிடம் அரைநாள் ஓய்வு
பெற்றுக்கொண்டு வெளியில் வந்தான்.
பேருந்து நிலையத்தை அடையும்போது கந்தையா எதிர்ப்பட்டார். அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். முன்பு அவனுடன்
ஒன்றாக அலுவலகப் பணி புரிந்தவர். கையில் ஒரு ஐந்து வயதுச் சிறுவனைப் பிடித்திருந்தார்.
“என்ன மாணிக்கம், சௌகரியம்தானே...?” கந்தையா வினவினார்.
“என்ன மாணிக்கம், சௌகரியம்தானே...?” கந்தையா வினவினார்.
“ஏதோ உங்க புண்ணியத்தில் இருக்கிறேன்...” மாணிக்கம் சலிப்புடன் கூறினான்.
“என்ன என் புண்ணியத்தில் என்கிறாய். அவன் புண்ணியம்
என்று சொல். ஆண்டவன் அல்லவா
எங்கள் எல்லோருக்கும் புண்ணியம் செய்கிறான்...” கந்தையா ஆண்டவனை ஆகாயத்தில் காட்டினார்.
“பையன் யாரு...?”
“யார் இவனா? இவனைத் தெரியாதா
உனக்கு...? இவன் ராசநாயகத்தின் மகன். என் பேரன், நல்ல பிள்ளை...”
“எந்த ராசநாயகம்...?”
“அட அவன் எண்ட மனுசியோட உடன் பிறந்த சகோதரன். மகேசுவரியை மணம்
முடித்தவன். ராசநாயகம் தெரியாதா? அவன் ஒரு ‘டோக்டர்’. ஆளு மெத்த கட்டை, மெத்த செவளை, தலை கொஞ்சம் வழுக்கல், மீசை நறுக்கல் – கன வடிவு, அவனைத் தெரியாதா? அவண்ட மகன்...”
“எங்க இந்தப் பக்கம்...?”
“அந்த நூல்நிலையத்தில் சின்ன பிள்ளைகளுக்குக் கதை சொல்வார்கள். அதற்குத்தான் இவனை எடுத்துக் கொண்டு போறேன். வா கொஞ்சம்
கதைக்கலாம். கோப்பி குடியேன்...” அவர் தொலைவில் உள்ள ஒரு கடையைக் காட்டி அழைத்தார்.
“இல்லேங்க, இன்னொரு நாளைக்குப்
பார்க்கலாம். நான் வர்றேன்...”
“சரி உன் விருப்பம்...” கந்தையா புறப்பட்டுவிட்டார்.
வழியெல்லாம் மாணிக்கத்திற்குக் கந்தையா பேசியதே நினைவாக இருந்தது. ‘இவங்க கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. என் வீட்டிலேயும் ஒருத்தி இருக்கிறாளே...! இப்படி எங்காவது அழைச்சிட்டுப் போறது உண்டா...? சே..!’ என்று மனதிற்குள்
அலுத்துக் கொண்டான்.
மாணிக்கம் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு மலர்மணி வியந்தாள். வழக்கத்தை விட
விரைவாக மாணிக்கம் வந்திருந்தான் அல்லவா?
சட்டையைக் கழற்றியபடியே, “மலர்மணி, உடையை மாற்றிவிட்டுத்
தயாரா இரு, நாம
ரெண்டு பேரும் ஒரு முக்கியமான காரியமாக வெளியே போகிறோம்...”என்று கூறிவிட்டுக் குளியல் அறைக்குள் விரைந்தான்.
என்ன காரியம் என்று தன் தந்தை கூறாவிட்டாலும், வெளியே போகப் போகிற களிப்பில் உடைமாற்ற மலர்மணி சிட்டாய்ப் பறந்தாள்.
பகல் நேர உணவிற்குப் பிறகு துணி திவைப்பதில் ஈடுபட்டிருந்த கற்பகம் தன் கணவன் குளிப்பதற்கு வழிவிட்டு வெளியே வந்தாள்.
நாற்காலியில் சரிந்து கிடந்த தன் கணவனின் மேல் சட்டையை எடுத்து ஒழுங்கு படுத்த முனைந்த போது பணம் கத்தையாகக் கீழே விழுந்தது.
பணத்தை அள்ளி எடுத்து எண்ணிப்பார்த்தபோது அவள் முகம் மலர்ந்தது. ‘ஏது இவ்வளவு பணம்...?’ என்று சிந்தித்தவளாய் அறைக்குள் நுழையும் வேளையில் மாணிக்கமும் குளித்துவிட்டு வந்தான்.
“ஏதுங்க இவ்வளவு பணம்...? இது மாத நடுப்பகுதியாயிற்றே! சம்பளமும் கிடைத்திருக்காதே...!” என்று வாயெல்லாம் பல்லாய் வினவினாள்.
மாணிக்கம் பணம் வந்த விதத்தைக் கூறினான். ‘அந்த ஆளுக்குப் புண்ணியமாகப் போவுது...’ என்று ஆறுதல் அடைந்தவளாய்க் கற்பகம் தன் பெட்டிக்குள் பணத்தை வைத்துப் பூட்டச் சென்றாள்.
அவள் பின்னல் வந்த மாணிக்கம், கண்ணாடி முன்
நின்று தலைவாரிக் கொண்டே, “அந்தப்பணத்தைப் பெட்டியில் வைக்க வேண்டாம். இப்படி வை..” என்று கட்டிலைக் காட்டினான்.
“ஏன்...?” என்று தீச்சுட்டதுபோல் பதறிப் போய்க் கேட்டாள் கற்பகம். தனக்கே உரிமையான
பொருள் பறிபோவது போல் அவள் துடிப்பைக் கண்டு மாணிக்கத்தின் மனம் இரங்கியது.
“முக்கியமான காரியத்துக்காக இந்தப் பணத்தைச் செலவு செய்யப் போகிறேன்...” என்று கனிவாகக் கூறியவாறு தன் மனைவியை உரசியவாறு கட்டிலில் அமர்ந்தான்.
“அப்படி என்ன முக்கியமான காரியம்...?” அவனை ஏறிட்டபடி கற்பகம் கேட்டாள்.
கற்பகமும் மகிழ்ந்து போவாள் என்ற எதிர்பார்ப்பில் மாணிக்கம் தான் செய்யவிருந்ததைப் பெருமையாகக் கூறினான்.
“ம்...ஹூம்...அதெல்லாம் முடியாது. இந்தப் பணம்
எனக்கு வேணும்” என்று கூறியபடி
பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.
“இந்தா பாரு, கற்பகம். நம்
மகளின் படிப்பு முக்கியமில்லையா? அவள் நன்றாகப் படித்தால் நமக்குத்தானே பெருமை. அவள் எதிர்காலத்துக்கும்
நல்லது...”
“நான் மறுக்கலயே, இன்னொரு சமயம்
வாங்கிக் கொடுத்தால் போகிறது...”
“ஏற்கனவே பலமுறை தள்ளிப் போட்டாகிவிட்டது. பிள்ளை ஆர்வம் குறைஞ்சிடாதா...?” என்று மேலும் சொல்ல வந்தவன், ஒருவேளை தன்
மனைவி அதைவிட முக்கியமான தேவையை மனத்தில் எண்ணி இவ்வாறு பேசுகிறாளோ என்று ஐயுற்று அவளிடமே கேட்டான்.
“இப்போது நகை விலை குறைந்திருக்கிறதாம். பவுன் இருநூறு வெள்ளிதான் என்று கௌரி சொன்னாள். ஒரு ஜோடி
கை வளையல்கள் வாங்கிக் கொள்ளப்போகிறேன்...” கற்பகம் ஆர்வத்துடன் கூறினாள். சொல்லும்போதே கையில்
வளையல்கள் குலுங்குவதைப்போல் கற்பனை செய்து ஆட்டிப் பார்த்துக்கொண்டாள்.
“அதற்கு இதுதானா சம்யம்? நகைக்கு இப்பொழுது
என்ன அவசரம்...?” மாணிக்கம் சற்றுச் சூடாகவே கேட்டான்.
“நல்லா இருக்கு, புத்தகங்களை எப்பொழுது
வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நகையை
அப்படி வாங்க முடியாதே. ஏதோ ஆச்சரியமா
விலை குறைந்திருக்கு. இந்த வாய்ப்பை நழுவவிடலாமா...?”
“விலை குறைவு என்பதற்காக வாங்க வேண்டுமா? உன்னிடம்தான் தங்க
வளையல்கள் இருக்கே...”
“எத்தனை வளையல்கள் இருக்கு? நாலே நாலு. பொல்லாத வளையல்கள். என் தோழிகள்
எல்லாம் கைக்கு ஆறு ஏழு என்று வைத்திருக்கிறார்கள். கை நிறையப் போட்டால்தானே நிறையும்...”
“மற்றவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டு செலவு செய்ய நம்மால் முடியாது. நீ பணத்தை
இப்படிக் கொடு...”
“ஆமா, நான்
ஏதாவது ஆசைப்பட்டுக் கேட்டால்தான் உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். நான் உங்களைக்
கல்யாணம் பண்ணி என்ன சுகத்தைக் கண்டேன்...” அழத் தொடங்கினாள் கற்பகம்.
அர்த்தமில்லாமல் பேசுவது மட்டுமில்லாமல், தன்னையும் பழித்துரைத்தது கண்டு மாணிக்கம் வெகுண்டெழுந்தான்.
“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? பிள்ளையின் கல்வியைவிட ஆடம்பரம் முக்கியமோ...?”
“நகையில் போடுகிற பணம் மழைநீர் பட்ட மண்ணுமாதிரி கரைஞ்சா போயிடும்? அதனால நமக்கு
உதவிதானே...?”
“உண்மைதான். ஆனா,
கல்விக்கு நாம செலவு செய்வது அதைவிடச் சிறந்தது. இன்னும் சொல்லப்
போனா, கல்விக்கு நாம
போடுகிற ‘முதலீடு’தான்
எல்லாத்திலும் உயர்ந்தது...”
“ஆமா...?”
“கற்பகம். நீ மட்டுமில்ல, தமிழர்களே இப்படித்தான். கையிலே பணம் இருந்தால் ஆடம்பரப் பொருள்கள் வாங்கத்தான் நினைக்கிறாங்க. நம்ம சகோதர இனத்தவர்களைப் பார். மலையாளிகளும், சிலோன்
தமிழரும் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. பிள்ளைகள் படிக்கணும்கிற ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா? விளக்கானாலும் தூண்டுகோல்
ஒன்று வேண்டாமா...”
“போதும் வாயை மூடு...” என்பது போல், பெட்டியில் வைத்த
பணத்தை எடுத்து அவன் முகத்தில் வீசாத குறையாகத் தரையில் தூக்கி எறிந்தாள்.
“நான் வேலை செய்யாம வீட்டிலேயே இருக்கிறதாலதானே எல்லாத்துக்கும் உங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கு. அடுத்த மாதத்திலிருந்து நானும் வேலைக்குப் போறேன்...” என்றவள் ஆத்திரத்துடன் வெளியேறினாள்.
மாணிக்கம் வாயடைத்துப் போனான். தன் மனைவிக்கு
எப்படிப் புரியவைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.
‘சரி, தொலையட்டும். இந்தப் பணத்தை இவளே பயன்படுத்திக் கொள்ளட்டும். இம்மாதச் சம்பளத்தில் செலவைக் குறைத்துக் குழந்தையின் தேவையை நிறைவேற்றலாம்....’ என்று தனக்குள் கூறிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.
ஆவலோடு முடிக்க ஓடிவந்த காரியத்தை நினைத்தபடி செய்ய இயலாமற் போயிற்றே என்று எண்ணியபோது அவன் உள்ளம் கனத்தது. அவன் கண்கள்
பனித்தன.
மலர்மணி கீழே சிதறிக் கிடந்த பணத்தைப் பொறுக்கித் தன் அம்மாளின் பெட்டிக்குள் வைத்தாள். அவள் கண்களில்
இருந்து பொட்டுப் பொட்டாய் நீர்த்துளிகள் பெட்டியின் மீது விழுந்தன.
‘என்னால் அவர்களுக்குள் வம்பு வேண்டாம்...” என்று அந்தப் பிஞ்சு மனம் எண்ணியது.
- 1983
- நன்றி: பொன் சுந்தரராசுவின் சிறுகதைகள்
2011, மூன்றாம் பதிப்பு
2011, மூன்றாம் பதிப்பு
* * *
No comments:
Post a Comment