நீ பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அது ஒரு பாலைவனத்தில் தடுமாறித் தரை இறங்குகிறது. அவ்விபத்தில்
நீயும் அதில் பயணம் ெசய்தவர்களும் பாதிக்கப்படுகிறீர்கள்.
அந்த விபத்தை விளக்கி 200 சொற்களில் எழுதவும்.
உதவி வரும்
தேரத்தில் !...
நாள்
1:
|
_ _ _ !
|
நாள்
2:
|
புகை மூட்டம் சற்றுக்
கலைந்தது. நானும் உயிர் தப்பிய சிலரும் சுதாகரித்துக் கொண்ட பின், இங்கும் அங்கும்
பார்க்கிறோம். பலர் காயம்பட்ட நிலையில் விழுந்து கிடக்கின்றனர். சிலர் இறந்து கிடக்கின்றனர்.
நாங்கள் இறந்தவர்களை அடக்கம் ெசய்கிறோம்; காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்கிறோம்.
|
நாள்
3:
|
உணவும் தண்ணீரும்
எங்கும் தென்படவில்லை. வெயில் மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று ேமலும்
சில பேர் மடிகின்றனர். என் காலில் பட்ட காயம் மேலும் மோசமாகிறது.
|
நாள்
4:
|
இன்று எனக்கு ஒரு
புதிய நண்பன் கிடைத்தான். அவன் பெயர் பீட்டர். அவனுக்குப் பத்து வயது. அவன் தன் குடும்பத்தினர்
அனைவரையும் இந்த விமான விபத்தில் இழந்துவிட்டான். அவனுக்கு உடலில் பல காயங்கள். இருந்த
போதிலும் துயரம் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறான். நான் அவனைப்
பார்த்து வியக்கிறேன்.
|
நாள்
5:
|
இன்று நாங்கள் சிறிய
பாலைவன விலங்குகளைப் பின் தொடர்ந்து செல்கிறோம். அவை ஒரு சிறிய குளத்தை நோக்கிச்
செல்கின்றன. குளத்தில் சிறிய அளவுதான் தண்ணீர் இருக்கிறது. சிறிது நேரத்தில் அது
காய்ந்துவிடும். நாங்கள் தாகம் தீரத் தண்ணீரைக் குடிக்கிறோம். பின்பு, கொண்டு வந்திருந்த
பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி மற்றவர்களுக்குக் கொண்டு செல்கிறோம். தண்ணீர் கிடைத்தாலும்
உணவு உண்ண வாய்ப்பில்லை. பசி என்னை வாட்டுகிறது. என் புண்ணும் மேலும் மோசமடைகிறது.
|
நாள்
7:
|
இன்று சில ஒட்டகங்கள் எங்களை நோக்கி வருகின்றன. நாங்கள்
எல்லோரும் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை தாக்கிக் கொல்கிறோம். வேறு வழியின்றி ஒட்டகத்தின்
மாமிசத்தைச் சாப்பிடுகிறோம். இதற்கிடையில் அங்கிருந்த ஒருவர் பயந்து போன மற்றொரு
ஒட்டகத்தின்மேல் ஏறிச் செல்கிறார். அவர் உதவி நாடிச் செல்கிறார்.
|
நாள்
9:
|
இரண்டு நாட்கள்
கழிந்துவிட்டன. ஒட்டகத்தில் சென்றவர் திரும்பி வரவே இல்லை. பீடடர் என் கண் முன்னால்
இறக்கிறான். எனக்கு ஆழக்கூடத் தெம்பில்லை.
|
நாள்
11:
|
பதினொரு நாட்கள்
ஆகிவிட்டன. தொலைவில் ஏதோ ஒரு சிறிய விமானம் வருவதுபோல் ஒலி கேட்கிறது. ஆனால், என்
உடம்பில் ஒரு துளி சத்துகூடக் கிடையாது. நான் அப்படியே மணலில் சாய்கிறேன். கொஞ்சம்
கொஞ்சமாகக் கண் இருட்டிக் கொண்டு வருகிறது. என் மூச்சு....
|
- R வர்ஷா, G1 வயது 14.
No comments:
Post a Comment